சிறைச்சாலை காவலர்களுக்கு ஏற்பட்ட கதி

0
755
Suspends 50 prison guards

(Suspends 50 prison guards)
சிறைச்சாலைகளினுள் இடம்பெறும் சட்டவிரோத செயல்களுடன் தொடர்புடைய 50 சிறைக்காவலர்கள் உட்பட சிறைச்சாலை அதிகாரிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சட்டவிரோத கையடக்க தொலைபேசி, போதைப் பொருட்கள் போன்ற பொருட்களை சிறைச்சாலையினுள் கொண்டுசென்று, சிறைக் கைதிகளுக்கு விநியோகித்தல் போன்ற குற்றங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இவர்களில் நான்கு நபர்களுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Suspends 50 prison guards