எரிபொருட்களின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு

0
1508
Fuel prices increase midnight today

(Fuel prices increase midnight today)
எரிபொருட்களின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக இன்று இடம்பெற்ற அமைச்சவையில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி நிதியமைச்சினால் இன்று பிற்பகல் புதிய விலைகளை அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நேற்றிரவு ஜனாதிபதி இல்லத்தில் ஜனாதிபதியின் தலைமையில் அமைச்சர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் எரிபொருளின் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 92 பெற்றோல் ஒரு லீற்றர் 137 ரூபாயும், 95 பெற்றோல் ஒரு லீற்றர் 148 ரூபாயும், டீசல் ஒரு லீற்றர் 109 ரூபாயும், சுப்பர் டீசல் ஒரு லீற்றர் 119 ரூபாயும், மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 101 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கும் சமுர்த்தி பயனாளிகளுக்கும் சலுகை மூலம் எரிபொருள் விநியோகிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Fuel prices increase midnight today