fire jungle solderer army control Tamil latest news mullaitivu
கேப்பாபுலவில் உள்ள தேக்கங்காட்டு வனப்பகுதியில் நேற்று மாலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
மூன்றாவது தடவையாகவும் நேற்று இவ்வாறு தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காட்டுக்கு அருகில் மூட்டிய நெருப்பு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக தேக்குமரஞ்சோலைகளில் கீழ் உள்ள காய்ந்த இலைகள் மற்றும் பற்றைகள் தீயினால் எரிந்து சாம்பலாகியுள்ளன.
இராணுவ முகாமுக்கு அருகில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் படையினர் தீயினை கட்டுப்பட்டிற்கு கொண்டுவந்துள்ளனர்.
தீயினால் 25 ஏக்கர் வரையான தேக்கங்காடுகள் எரிந்துள்ளன.
இந்தநிலையில், நிலவும் கடும் வெப்பமான காலநிலையில் மக்கள் குப்பைகளுக்கு நெருப்பு மூட்டும் போது அவதானமாக செயற்படுமாறு இராணுவத்தினர் கோரியுள்ளனர்.
fire jungle solderer army control Tamil latest news mullaitivu
More Tamil News
- மிருக இனம் கொண்டவர்கள் மஹிந்தவும் நாமலும் ; சரத் பொன்சேகா பதிலடி
- மூன்று சிறுமிகளை சீரழித்த குடும்பத்தினர்; நுவரெலியாவில் அதிர்ச்சி
- கட்டுநாயக்கவில் புறப்படவிருந்த விமானங்கள் தாமதம்
- விபத்தில் உயிரிழந்தவர் மூன்று கோடியை கடனாகப் பெற்ற ஆச்சரியம்
- தவறான சிகிச்சையால் 03 மாத குழந்தை பலியான சோகச் சம்பவம்
- குளவிக்கூட்டினால் மாணவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்
- மாங்குளத்தில் சூறாவளி ; 12 வீடுகள் சேதம்
- பால்மா தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப் போவதில்லை
- மனைவி கள்ளக்காதல்; கணவனுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு
- பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கின் வரி அதிகரிப்பு