(tamilnews North South Korean leaders meet second time)
(News Video Source – CNN)
வட கொரியா மற்றும் தென் கொரியாவின் அரச தலைவர்கள் இராணுவம் விலக்கப்பட்ட பகுதியிக்ல் தீடீரென சந்தித்து கொண்டுள்ளனர்.
வட கொரியாவின் கிம் ஜாங்-உன் மற்றும் தென் கொரிய தலைவர் முன் ஜே-இன் ஆகியோர் இரண்டாவது முறையாக இந்த சந்திப்பை நடத்தியுள்ளனர்.
வட கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான உச்சி மாநாடு ரத்து செய்யப்பட்ட நிலையில், அதனை மீண்டும் நடத்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அறியமுடிகிறது
ஜூன் 12 ஆம் திகதி நடைபெறவிருந்த உச்சி மாநாட்டை ரத்து செய்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மீண்டும் மாநாடு நடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.
இராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் உள்ள, கூட்டு பாதுகாப்பு பகுதியில் உள்ளூர் நேரப்படி மாலை மூன்று மணி முதல் ஐந்து மணி வரை இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது என மூனின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வட கொரியா – அமெரிக்கா உச்சி மாநாடு வெற்றிகரமாக நடைபெறுவது தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
மேலும் இந்த பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்து நாளைய தினம் தென்கொரிய அதிபர் தெரிவிப்பார் என்றும் முன்னின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
திட்டமிட்டப்படி வட கொரிய அதிபர் கிம்முக்கும் ட்ரம்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றால், கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை குறைப்பது குறித்தும் அணு ஆயுதங்களற்ற கொரிய தீபகற்பம் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(tamilnews North South Korean leaders meet second time)
More Tamil News
- யாழ்ப்பாணத்தில் கேபிள் ரிவி இணைப்புக்கள் துண்டிக்க நடவடிக்கை
- வைரஸ் தொற்று அதிகரிப்பு; மக்களே அவதானம்; 14 பேர் பலி
- முள்ளிவாய்க்கால் நினைவுச்சுடர் ஏற்றிய தமிழ் வங்கி ஊழியர்கள் பணிநீக்கம்; பேரினவாதிகளின் சதி
- சுட்டுப் பழகுவதற்கு தமிழர்கள் என்ன கைப்பொம்மையா? யாழ். நல்லூரில் ஆர்ப்பாட்டம்
- தமிழர் தாயகத்தில் கொதித்தெழுந்த மக்கள்; ஹற்றன் நஷனல் வங்கி அதிர்ச்சியில்
- ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு; போக்குவரத்து தடை
- கரடி தாக்குதலில் படுகாயமடைந்த மீனவர் வைத்தியசாலையில்
- 14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது
- மாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை; இருவர் யாழில் அதிரடியாகக் கைது
- இன ரீதியான பழிவாங்கல் இல்லை; ஹற்றன் நஷனல் வங்கி