(tamilnews hindu buddhist monks protest cow cutting stop warning)
பசுக்கள் மீதான வதைகளை எதிர்த்து இந்து – பௌத்த மத தலைவர்களினால் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டுள்ளது.
‘பசுவதையை ஒழிப்போம் பசுவை காப்போம்’ எனும் தொனிப்பொருளில் யாழ் தென்மராட்சி பிரதேச இந்து மக்கள் ஏற்பாடு செய்த இந்த அடையாள உண்ணாவிரதம் இன்று சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது
யாழ் மாவட்டத்தில் குறிப்பாக சாவகச்சேரி பிரதேச செயலக பிரிக்குட்பட்ட பகுதிகளில் பசுவதை இடம்பெறுவதாகவும், அதனை உரிய தரப்பினர் கவனத்தில் கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் இங்கு வலியுறுத்தப்பட்டது
அத்துடன் இப்பகுதியிலுள்ள மாட்டிறைச்சி விற்பனை நிலையத்தில் மக்களின் தேவைக்கதிகமாக மாடுகள் அறுக்கப்பட்டு வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்படுவதையும் தடுத்து நிறுத்துமாறு போராட்டக்கார்ர்கள் வலியுறுத்தினர்.
குறித்த மாட்டிறைச்சிக் கடையை அகற்றவேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கைவிடுத்தனர்
இன்று காலை ஆறு மணி தொடக்கம் மாலைவரை இடம்பெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் யாழ் நாகவிகாரை விகாராதிபதி மீகஹகந்துரே விமலதேரர், நல்லை ஆதீன குரு முதல்வர் சிறிலசிறி சோமசுந்தர தேசிக பரமாச்சாரியார் மற்றும் யாழ் சின்மயா மிஷன் சுவாமிகள் உள்ளிட்டவர்களும் உண்ணாவிரத்த்தில் கலந்துகொண்டு பசுவதைக்கெதிராக தமது கருத்துக்களை பதிவு செய்தனர்.
(tamilnews hindu buddhist monks protest cow cutting stop warning)
More Tamil News
- யாழ்ப்பாணத்தில் கேபிள் ரிவி இணைப்புக்கள் துண்டிக்க நடவடிக்கை
- வைரஸ் தொற்று அதிகரிப்பு; மக்களே அவதானம்; 14 பேர் பலி
- முள்ளிவாய்க்கால் நினைவுச்சுடர் ஏற்றிய தமிழ் வங்கி ஊழியர்கள் பணிநீக்கம்; பேரினவாதிகளின் சதி
- சுட்டுப் பழகுவதற்கு தமிழர்கள் என்ன கைப்பொம்மையா? யாழ். நல்லூரில் ஆர்ப்பாட்டம்
- தமிழர் தாயகத்தில் கொதித்தெழுந்த மக்கள்; ஹற்றன் நஷனல் வங்கி அதிர்ச்சியில்
- ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு; போக்குவரத்து தடை
- கரடி தாக்குதலில் படுகாயமடைந்த மீனவர் வைத்தியசாலையில்
- 14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது
- மாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை; இருவர் யாழில் அதிரடியாகக் கைது
- இன ரீதியான பழிவாங்கல் இல்லை; ஹற்றன் நஷனல் வங்கி