நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் வேதன அதிகரிப்புக்கு இடமளிக்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். president maithripala sirisena announce no increment salary ministers
பொலன்னறுவையில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சரவை அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்களது வேதனம் அதிகரிக்கப்படுவதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதற்கமைய 54 ஆயிரத்து 285 ரூபாவாக நிலவிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வேதனம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாவாகவும் 63 ஆயிரத்து 500 ரூபாவாக நிலவிய பிரதியமைச்சர் ஒருவரின் வேதனம் ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
65 ஆயிரம் ரூபாவாக நிலவிய ராஜாங்க அமைச்சர் ஒருவரின் வேதனம் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களது வேதனத்தை அதிகரிக்க கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்ததாக ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டிருந்தன.
எனினும் அவ்வாறான எந்தவொரு தீர்மானத்திற்கும் தான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மூன்று வருடக் காலப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் வேதனம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு அவ்வப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி என்ற வகையில் தனது வேதனத்தை அதிகரிப்பதற்கு முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை தான் உறுதியாக நிராகரித்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முயற்சித்து வருகின்ற இந்த சந்தர்ப்பத்தில், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதன அதிகரிப்பு பொருத்தமானது அல்லவெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
president maithripala sirisena announce no increment salary ministers
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- நாட்டின் ஒற்றுமையை குழப்புவதற்கு எதிர்கட்சிகள் முயற்சி; இராதாகிருஸ்ணன்
- பாதை எது? குழி எது? கர்ப்பிணித் தாய்மார்கள் அனுபவிக்கும் அவலம்
- புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது
- போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?
- அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
- காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- பெண்களின் தொடையை வீடியோ எடுத்த நபரைத் தாக்கிய பொதுமக்கள்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com