(mullivaikkal remembrance day sinhala peoples upset)
வடமாகாண முதலமைச்சர் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதனால் தென்னிலங்கையில் உள்ள மக்கள் விசனத்துக்கு ஆளாகியுள்ளதோடு குழப்ப நிலையை அடைந்திருக்கிறார்கள். இந்த நடவடிக்கை இராணுத்தினருக்கோ பாதுகாப்பு படையினருக்கோ சிங்கள மக்களுக்கோ பல தவறான எண்ணப்பாடுகளை விதைக்கின்ற செயலாகவே அமைந்திருக்கின்றது என்பதனை நாம் காண்கின்றோம் என்று உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட உயிர்களை பலிக்கடாக்களாக வைத்துக்கொண்டு பிரபாகரன் யுத்தத்தை நடாத்தியிருந்தார்.
ஒருகாலத்தில் வடபுலத்தில் வாழ்ந்த சிங்கள, முஸ்லீம் மக்கள் 24 மணித்தியாலத்திற்குள் வெளியேற்றப்பட்டார்கள்.இன்றைய நிலையில் இப்பிரதேசத்திலே வாழ்ந்து வரும் தமிழ்,சிங்கள,முஸ்லீம் மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றார்கள் என்றால் அதற்கு முப்படையினரே காரணம் என்பதை யாவரும் அறிவர்.
இராணுவம் அகற்றப்படவேண்டும் என்பதே விக்கினேஸ்வரனின் பிரச்னையாக உள்ளது. இராணுவத்தை பொறுத்தமட்டில் அந்த பிரதேச மக்களோடு நல்லுணர்வை பேணுவதுடன் அவர்களுக்கான பாதுகாப்பையும் வழங்கி வருகிறார்கள். இறுதி போரில் கூட 3 இலட்சம் மக்களை முப்படையினர் பாதுகாப்பாக மீட்டிருந்தனர் அதனாலே இன்று சமாதானம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.ஆனால் அந்த காலகட்டத்தில் தென்பகுதியில் இருந்த விக்கினேஸ்வரன் அங்கிருந்தவர்களுடன் நல்லுறவை பேணிக்கொண்டிருந்தார். யுத்த பிரதேசத்தில் காலடி எடுத்து கூட வைக்கவில்லை. அப்பாவி மக்களுக்காக ஒரு வசனம் கூட பேசவில்லை.எனவே முதலமைச்சர் அவர்கள் ஆழமாக சிந்திக்கவேண்டும் அல்லாது விடில் மீண்டும் ஒரு இருண்ட யுகத்திற்கு நாம் பயணம் செய்யவேண்டிய நிலை ஏற்படும்.
அத்துடன் பிரபாகரன் பிறந்த தினத்தை இங்கு கொண்டாடினால் சிங்கள மக்கள் அவரின் மரண தினத்தை தென்பகுதியில் கொண்டாடும் நிலையும் இருக்கிறது. பிரபாகரனின் பிறந்தநாளை கொண்டாடினால் தென்பகுதியில். விஜயவீரவின் பிறந்தநாளையும் இறந்தநாளையும் அந்த மக்களும் அனுஸ்டிக்கவேண்டும் அல்லவா. அவ்வாறு இருக்கும் போது நல்லிணக்கத்தை எவ்வாறு கட்டமைப்பது.
வடக்கிற்கு மாகாணசபை மூலம் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதன் மூலம் அபிவிருத்திகளை மேற்கொள்ளலாம். ஆனால் எதையுமே செய்யாத நிலைமை எதிர்காலத்தில் அந்த மக்கள் இன்னும் பல பிரச்னைகளிற்கு முகம்கொடுக்கும் நிலமையையே ஏற்படுத்தும் என்று கூறினார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
-
-
- யார் இவர்கள்? : வடக்கில் புகைப்படம் எடுக்கும் மர்ம நர்கள்
- ‘ஏன்ட பிள்ளைய கேவலப்படுத்துறாங்க” : இசைப்பிரியாவின் தாய் கதறலுடன் விடுக்கும் கோரிக்கை
- ‘பாலச்சந்திரன் ஒரு சுட்டிப்பையன்’ – ஒரு போராளி கூறும் உண்மை கதை
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு சென்று வந்த உறவுகளுக்கு இராணுவத்தினர் செய்த வேலை
- முள்ளிவாய்க்காலில் பதிவான நெகிழ்ச்சியான சம்பவம் : புகழும் தமிழ் உறவுகள்!
- அரசாங்க இணையத்தில் பறக்கும் புலிக்கொடி : திக்குமுக்காடும் அரசாங்கம்
- புலிக்கொடியை எரித்து, மிதித்து போர் வெற்றி கொண்டாடிய தென்னிலங்கையினர்
- முள்ளிவாய்க்கால் படுகொலை; உணர்வெழுச்சியுடன் தமிழ் ஊடகங்கள்
- வலிசுமந்த மண்ணை நோக்கி யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பயணம் ஆரம்பம்
-
Time Tamil News Group websites :
-
-
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags:mullivaikkal remembrance day sinhala peoples upset,mullivaikkal remembrance day sinhala peoples upset,
-