ஜனாதிபதித் தேர்தல் மீது பொது மக்களின் ஆர்வம் அதிகரிப்பு: ஆட்சியாளர்கள் விரைவில் வீட்டுக்குச் செல்ல நேரிடும்!

0
30

ஜனாதிபதித் தேர்தல் மீதான பொது மக்களின் ஆர்வம் அதிகரித்து வருவது ஆட்சியாளர்கள் விரைவில் வீட்டுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்பதை எடுத்துக்காட்டுவதாக தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் அமைப்பின் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.

பத்தரமுல்லை பெலவத்தையிலுள்ள ஜேவிபி தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார,

“ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை நிர்ணயம் செய்வதற்கும் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கூடிய விரைவில் அதனை நடைமுறைப்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு நினைவூட்டுகிறோம். மற்ற சந்தர்ப்பங்களைப் போல் அல்லாமல் மக்கள் ஜனாதிபதி தேர்தலுக்காக எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

தேர்தல் குறித்து கேள்வி கேட்கும் பொது மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஆட்சியாளர்கள் விரைவில் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதையே காட்டுகிறது.

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் வீட்டுக்குப் போக வேண்டும் என்று தெரிந்தும் மக்கள் மனதில் தயக்கத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்த முயற்சிக்கிறது.

இந்த ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க வழியில்லை என நான் ஒரு சட்டத்தரணியாக அறிவிக்கிறேன். ரணிலின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளன.

ரணிலின் முயற்சிகள் எதுவாக இருந்தாலும் எமது நாட்டின் தேர்தல் சட்டங்களின்படி இந்த ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முடியாது. எனவே, ஒவ்வொருவரும் அந்த எண்ணத்தை மனதிலிருந்து அகற்ற வேண்டும்.

சட்டம் மற்றும் அரசியல் என்பது இரண்டு விடயங்கள். எல்லாம் சட்டப்படி நடக்காது. இம்மாத இறுதிக்குள் தேர்தல் திகதி தெளிவாக அறிவிக்கப்பட்டால் ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதி வேட்பாளர்.

அவர் வேட்பாளராகி, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவர் போட்டியிடும் தேர்தலில் செல்வாக்குச் செலுத்தும் செயல்களைச் செய்ய முயன்றால், அது அரசியலமைப்பு மற்றும் சட்டவிரோதமானது என்பதை நாம் கேட்க வேண்டும்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியதன் பின்னர் தேர்தல்களில் செல்வாக்கு செலுத்த முயற்சிக்கிறார் என்றால் தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளனர்.

தெளிவாகச் சொல்வதென்றால் ரணிலும் முழுமையான தோல்விதான். அவர் வீட்டுக்குப் போவார். அதில் சிக்கல்கள் இல்லை.” எனத் தெரிவித்தார்.