எப்போதும் குடி போதை… வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்ட பெண்!

0
72

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர் குடிபோதையில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. உண்மை என்னவென்றால் ஆட்டோ – ப்ரூவரி சிண்ட்ரோம் என்ற அரிய வகை நோயால் குறித்த பெண் பாதிக்கப்பட்டுள்ளார்.

50 வயதான குறித்த பெண் 7 முறை மருத்துவமனைக்குச் சென்ற நிலையில் குடிபோதையில் இருப்பதாக கூறி வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஆட்டோ – ப்ரூவரி சிண்ட்ரோம் என்பது குடலில் உள்ள பூஞ்சைகள் நொதித்தல் மூலம் மதுவை உருவாக்கும் ஒரு நிலையாகும். இதே போன்ற ஒரு நோயாள் பாதிக்கப்பட்ட நபர் பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.