பிரித்தானியாவில் ஈழத்தமிழருக்குக் கிடைத்த உயரிய விருது!

0
39

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவரும் பிரித்தானிய கால்நடை அறுவை சிகிச்சை நிபுணருமான பிரின் பிரதாபன், பிரித்தானியாவில் சமையல் போட்டியொன்றில் வெற்றிப் பெற்று “மாஸ்டர்செஃப் செம்பியன் 2024“ என்ற பட்டத்தை வென்றுள்ளார்.

பிரித்தானிய தொலைக்காட்சி ஒன்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த சமையல் போட்டியின், 20ஆவது தொடர் முடிவில் பிரின் பிரதாபன் குறித்த வெற்றியைப் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் குறித்த போட்டியின் நடுவர்களான ஜோன் டோரோட் மற்றும் கிரெக் வாலஸ் ஆகியோரால் “மாஸ்டர்செஃப் செம்பியன் 2024“ என்ற பட்டம் பிரினுக்கு வழங்கப்பட்டுள்ளது.

8 வாரங்களாக நடைபெற்ற குறித்த போட்டியில் 57 சமையல் போட்டியாளர்களைக் கடந்து பிரின் வெற்றி பெற்றுள்ளார்.

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தனது பெற்றோரே, உணவு மற்றும் சுவையின் மீதான தனது விருப்பத்தை ஊக்குவித்ததாக பிரின் தெரிவித்துள்ளார்.

தமது சமையல் பகுதிகள் இலங்கையின் தமிழ் பாரம்பரியம் மற்றும் தமது பிரித்தானிய வளர்ப்பின் கலவையாகும் என்றும் பிரின் பிரதாபன் குறிப்பிட்டுள்ளார்.