பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பமாகின!

0
65

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்த நிலையில், முதலாம் தவணைக்கான மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று (20) ஆரம்பமாகியுள்ளன.

எதிர்வரும் 31ஆம் திகதி வரை குறித்த கல்வி நடவடிக்கைகள் நடைபெறவுள்ளன.

இந்த வருடத்திற்கான இரண்டாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் கடந்த மாதம் 24ஆம் திகதி ஆரம்பமாகின.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை காரணமாக கடந்த 3ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.