தென்னை மரத்தில் ஏறிய தங்க வளையல்

0
72

வீடொன்றில் திருடப்பட்ட 1,40,000 ரூபாய் பெறுமதியான தங்க வளையல், 40 அடி உயர தென்னை மரத்தின் உச்சியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த  நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் இளைஞன் ஒருவரையும் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

பதுளை, மெதபத்தனை பகுதியில்  வீடொன்றில் யாரும் இல்லாதபோது ஜன்னலை உடைத்து உள் புகுந்து  தங்க வளையல் ஒன்றையும்,  37,000 ரூபாய்  பணத்தையும் திருடிச்சென்றுள்ளதாக பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற  தகவலொன்றிக்கமைய  விசாரணைகளை மேற்கொண்ட  பொலிஸார்  22 வயதுடைய  இளைஞன்  ஒருவரை  கைது  செய்துள்ளனர் .

அவரிடம் மேற்கொண்ட விசாரணையின்  போது திருடப்பட்ட பணத்தை தான் செலவிட்டதாகவும் தங்க வளையலை , தென்னை மரத்தின் உச்சியில் மறைத்து வைத்துள்ளதாகவும்  பொலிஸாரிடம்  தெரிவித்துள்ளார் .

மேலும்,  இச்சம்பவம்  தொடர்பிலான  மேலதிக  விசாரணைகளை  பொலிஸார்  மேற்கொண்டு வருவதாக  தெரிவித்துள்ளனர் .