தடியினால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை!

0
36

கொழும்பு – ஜம்பட்டா வீதியில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஜம்பட்டா வீதி காவல்துறையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய குறித்த நபரின் சடலம், காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய நபரொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரை, இனந்தெரியாத ஒருவர் தடியொன்றினால் தாக்கிக் கொலை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.