திடீரென மயங்கி வீழ்ந்து பறிபோன 13 வயது மாணவி உயிர்

0
74

இரத்தினபுரி – கலவான பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்த நிலையில் இன்று (06.03.2024) உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் இரத்தினபுரி – கலவான பிரதேசத்தை சேர்ந்த 13 வயதுடைய பாடசாலை மாணவி என அறியப்பட்டுள்ளது.

இவர் மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இவர் முன்னரே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.