கற்பனையில் வாக்குறுதியளிக்க முடியாது – எதிர்க்கட்சிகள் மீது சாடுகிறார் ரணில்

0
82

இலங்கை தீவின் பொருளாதாரத்தை முன்னேற்றுவது மற்றும் சர்வதேச கடன் திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார்.

இன்று புதன்கிழமை ஆரம்பமான அமர்வில் சிறப்பு உரையாற்றுகின்ற ரணில் விக்கிரமசிங்க தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் மாணவர்களின் கல்வித் திட்டத்தை உயர்த்துவது போன்ற விடயங்கள் பற்றி விபரிக்கிறார். விவசாயத்துறை முன்னேற்றம் அதற்கான உதவித் திட்டங்கள் மற்றும் முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பாகவும் விளக்கமளிக்கிறார்.

அதேநேரம் மின்சார கட்டணங்கள் குறைக்கப்பட்டமை மற்றும் மாணவர்களுக்கான கல்வி உபகரணங்களுக்குரிய வற் வரிகள் போன்றவற்றை குறைப்பது பற்றியும் ரணில் விக்கிரமசிங்க தனது உரையில் விபரிக்கிறார்.