தன் காத்திருப்பை வாய்க்கரிசி போட்டு நிறைவேற்றவுள்ள சாந்தனின் அம்மா..!

0
91

தமிழகத்தில் நோய்வாய்ப்பட்டு உயிர் துறந்த அரசியல் கைதி தில்லையம்பலம் சுதேந்திரராஜா (சாந்தன்) அவர்களது புகழுடல் தற்போது தனது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

33 வருட சிறைதண்டனையை அனுபவித்து விட்டு விடுதலையாகி தாயின் 33 வருட கனவை நினைவாக்க தாயகம் திரும்ப தயாரான நிலையில் தாயினது எதிர்ப்பார்ப்புகளை சீர்குலைக்கும் விதமாக சாந்தனின் மரணம் நிகழ்ந்துள்ளது.

சாந்தனின் மரணம் தொடர்பிலும் தாயின் எதிர்ப்பார்பின் ஏமாற்றம் பற்றியும் முகநூல் வாசி தனது அபிப்பிராயத்தை பகிர்ந்துள்ளார்.

உலகில் மரணித்த போராளிகள் எல்லாம் வேதனைகளை அனுபவித்து மடிந்தவர்களே.

அவர்கள் அனுபவித்த வேதனைக்கு சற்றும்குறையாத வேதனையை அனுபவிப்பவர்கள் அவர்களைப் பெற்ற தாய்மார்கள்.

ஆனால் மரணித்த போராளிகளை தியாகிகள் என்று நினைவுகூறும் வரலாறு அத் தாய்மார்களை அப்படி நினைவுகூர்வதில்லை.

தாயின் கையால் ஒரு கவளம் சோறு தின்ன வேண்டும் என்றே சாந்தன் விரும்பினார்.

சாந்தனின் அந்த கடைசி விருப்பத்தை வாய்க்கரிசி போட்டு நிறைவேற்றப்போகிறார் தாய்.

33 வருடமாக தன் மகனைக் காண காத்திருக்கும் தாய் மகனின் உயிரற்ற உடலைக் காண நேருவது மிகப் பெரிய துயரம்.

அக் கொடுந் துயரத்தை அனுபவிக்கும் இத் தாயை நாம் என்ன சொல்லி தேற்றுவது என்பதில் வருத்தமாகவுள்ளது.