சுற்றி வளைத்த பொலிஸ்..! கழிவு நீருக்குள் பாய்ந்த பெண்

0
92

மட்டக்களப்பில் அந்தரங்க பகுதியில் போதைப்பொருள் மறைத்துவைத்த தமிழ் பெண்ணொருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் 45 வயதுடைய  நீண்டகால போதைப்பொருள் வியாபாரியை கைது செய்துள்ளதாக மட்டக்குளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது சந்தேகநபரிடம் இருந்து ஐந்து இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான 12 கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கழிவு நீருக்குள் பாய்ந்த  பெண்

மட்டக்குளி பொலிஸ் விசேட பணியகத்தினருக்கு கிடைத்த விசேட தகவலுக்கமைய , சந்தேகநபரான பெண்ணின் வீட்டை சுற்றிவளைத்து சோதனையிட்டனர்.

பெண் பொலிசார், சந்தேகநபரை சோதனையிட்ட போது, அவரது மார்புக் கச்சைக்குள் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரை வீட்டின் ஒரு பகுதியில் வைத்து பொலிசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்த போது, அவர் திடீரென சமையலறை பக்கமாக ஓடிச்சென்று, கழிவு நீர் செல்லும் வாய்க்காலுக்குள் குதித்துள்ளார்.

நீருக்குள் இருந்தபடி. தனது மார்புக் கச்சைக்குள்ளிருந்த போதைப்பொருள் பொதியை வெளியே எடுத்து வீசியெறிந்துள்ளார். இதனையடுத்து மற்றுமொரு மேலதிக பொலிஸ் குழு ஸ்தலத்திற்கு வரவழைக்கப்பட்டு, பெரும் பிரயத்தனத்தின் பின் சந்தேக நபரை கைது செய்தனர்.

மேலும் சந்தேக நபர் இதற்கு முன்னரும் பல தடவைகள் போதைப்பொருளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.