கிளிநொச்சியில் படகுகள் மோதி விபத்து – 7 பேர் வைத்தியசாலையில்

0
76

கிளிநொச்சி பகுதியில் இரண்டு படகுகள் மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த 7 பேர் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்றையதினம் (02-03-2024)  பூநகரி, பாலைதீவு பகுதியில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்றையதினம் கிளிநொச்சி – பூநகரி, பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தல வருடாந்த திருவிழா இடமபெற்றது.

இதன்போது குறித்த திருவிழாவுக்கு சென்ற இரண்டு படகுகளே மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இதனையடுத்து, விபத்தில் காயமடைந்த 7 பேர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.