கிச்சி மூட்டியதால் ஏற்பட்ட விபரீதம்: பரிதாபகரமாக உயிரிழந்த கைதி

0
132

இரு கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட கிச்சி மூட்டிய சம்பவம் தீவிரமடைந்து கொலையில் முடிந்த சம்பவமொன்று திருகோணமலை சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கைதி ஒருவர் மற்றைய கைதியை தூக்கி தரையில் அடித்தமையால் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக திருகோணமலை துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, தாக்குதலுக்கு உள்ளான கைதி சிமெண்டில் தலையில் அடிபட்டு அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.

பின்னர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருகோணமலை கிண்ணியா மஹரூப் நகரைச் சேர்ந்த ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்தார்.

கொல்லப்பட்ட கைதியும் கொலையைச் செய்த கைதியும் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இருவரும் நண்பர்கள் எனவும் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்