ஒரு மணித்தியாலத்தில் 5 முறை நிலநடுக்கம்: அதிர்ச்சியில் உறைந்த வியட்நாம் மக்கள்!

0
103

வியட்நாம் – மத்திய ஹைலேண்ட் மாகாணமான கோன் தும் பகுதியில் உள்ள கோன் ப்லாங் மாவட்டத்தில் ஒரே நாளில் 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் நேற்றையதினம் (07-02-2024) பதிவாகியுள்ளது. 

இலங்கை நேரப்படி காலை 8.41 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ஒரு மணித்தியாலத்திற்குள் தொடர்ந்து 5 முறை ஏற்பட்டதாக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கங்கள் முறையே 4.0, 3.3, 2.8, 2.5, மற்றும் 3.7 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளன.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தபோதும் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து 5 முறை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.