பிரித்தானியாவில் பொதுத்தேர்தல் நடைபெறும் திகதி அறிவிப்பு!

0
39

பிரித்தானியாவில் எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக் இதனைத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பிரித்தானியாவில் நடைபெற்ற இடைத்தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது.

அத்துடன் பொதுத் தேர்தல் தொடர்பான பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில், பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி தோல்வியடையும் என்று கூறப்படும் நிலையில் தற்போது தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.