போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது

0
131

மன்னார் – சௌத்பார் பகுதியில் கைவிடப்பட்ட அட்டை பண்ணை ஒன்றில் இருந்து போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் காவல்துறையின் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்படி அவர் கைதானார்.

கைதானவரிடம் இருந்து 31,000 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதானவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.