விடுதலைப்புலிகளின் கொடியுடன் முல்லைத்தீவில் பறந்த பட்டத்திற்கு எதிராக விசாரணை

0
148

முல்லைத்தீவு கடற்கரையில் பட்டத்திருவிழாவின்போது ஈழத்தின் வரைபடத்தை உள்ளடக்கியும் விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான கொடியை காட்டி பறக்கவிட்ட பட்டம் தொடர்பில் குறித்த இளைஞனிடம் விசாரணை நடத்த முல்லைத்தீவு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த 28ஆம் திகதி மாலை முல்லைத்தீவு கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பட்டத்திருவிழா திருவிழாவின்போதே குறித்த பட்டம் பறக்கவிடப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல்

போர்க்காலத்தில் விடுதலைப் புலிகளின் ஈழ உணர்வும், கார்த்திகை மலரும் அடங்கிய பட்டம் இவ்வாறு பறக்கவிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த பட்டம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதையடுத்து, குறித்த இளைஞரை கண்டுபிடித்து விசாரிக்க முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.