ஜே ஷாவிற்கு தொலைபேசி அழைப்பு விடுத்த ஜனாதிபதி ரணில்

0
156

ஆசிய கிரிக்கட் பேரவையின் தலைவர் ஜே ஷாவுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார்.

இந்தத் தகவலை நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையானது விளையாட்டை தாண்டி, சர்வதேச அரசியல் நெருக்கடியாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கட் பேரவை

சர்வதேச கிரிக்கட் பேரவையினால் விதிக்கப்பட்டுள்ள தடைக்கு நாடாளுமன்றமே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

ஜே ஷாவிற்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்த ஜனாதிபதி ரணில் | Sri Lanka Cricket Committee Issue Bcci Today