ஹிட்லரின் பாணியில் வணக்கம் செலுத்திய மூவர் கைது!

0
160

சிட்னி யூத அருங்காட்சியகத்திற்கு வெளியே ஜேர்மனி சர்வாதிகாரி அடொவ் ஹிட்லரின் பாணியில் வணக்கம் செலுத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நள்ளிரவில் இடம்பெற்றுள்ளது.

ஹமாஸ் – இஸ்ரேல் மோதல் காரணமாக உலக நாடுகளில் பதற்றம் அதிகரித்துவரும் நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எனினும் இந்த சம்பவத்தால் அருங்காட்சியகத்திற்கோ பணியாளர்களிற்கோ பாதிப்பு இல்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

அருங்காட்சியகம் தொடர்ந்தும் பாதுகாப்பான இடமாக விளங்குகின்றது என தெரிவித்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டவர்கள் யார் என்ற விபரங்களை பொலிஸார் வெளியிடவில்லை.