அசாத் மௌலானாவின் புதிய ஆவணங்கள்..

0
199

சனல் 4 ஆவணப் படத்தில் முக்கிய விடயங்களை வெளியிட்ட ஹன்சீர் அசாத் மௌலானா,  ஜெனீவாவின் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு தனது குற்றச்சாட்டுகளின் தகவல்கள் அடங்கிய ஆவணமொன்றை  அனுப்பி வைத்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதன் பிரதியை அவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

இதேவேளை, சனல் 4இன் ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நிராகரித்து புலனாய்வு பிவிரின் அதிகாரி சுரேஸ் சாலே ஐக்கிய இராச்சியத்தின் ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்த முறைப்பாட்டை ஒவ்கொம் எனப்படும் அந்த அமைப்பு நிராகரித்துள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.