லண்டனில் 68 வயதில் 3வது திருமணம் செய்து கொண்ட இந்திய கோடீஸ்வரர்

0
190

இந்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞரும், பெரும் கோடீஸ்வரருமான ஹரீஷ் சால்வே 3வது திருமணம் செய்து கொண்டார். 68 வயதான ஹரிஷுக்கு லண்டனில் கோலாகலமாக மூன்றாவது திருமணம் நடைபெற்றுள்ளது.

1999 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரை இந்திய அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த ஹரீஷ் பல்வேறு சர்வதேச வழக்குகளில் வாதாடியுள்ளார். ஹரீஷின் சொத்து மதிப்பு $5 மில்லியனை தாண்டும்.

இவர் தனது முதல் மனைவி மீனாட்சி என்பவரை 2020 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதனைத் தொடர்ந்து கரோலீன் புரோசார்ட் என்பவரை மணந்தார். தற்போது 3வது முறையாக திரானா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

லண்டனில் நடைபெற்ற திருமணத்தில் முகேஷ் அம்பானி, நீடா அம்பானி, சுனில் மிட்டல், கோபி இந்துஜா, லலித் மோடி போன்ற பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.