பிரபல சின்னத்திரை நடிகை தீபா இரண்டாவது திருமணம்

0
604

பிரபல தமிழ் சின்னத்திரை நடிகை தீபா மறுமணம் செய்து கொண்டுள்ளார். ’அன்பே சிவம்’, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’, ‘பிரியமான தோழி’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளவர் தீபா.

இவருக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார். ஆனால் அந்தத் திருமண வாழ்க்கைச் சுமூகமாக அமையாததால் கணவருடன் முறைப்படி விவாகரத்து பெற்று விட்டார்.

இந்த நிலையில் சின்னத்திரை தொடர்களில் தயாரிப்பு மேலாளராக பணிபுரிந்து வரும் சாய் கணேஷுடன் தீபாவுக்கு காதல் ஏற்பட்டது.

தீபாவுக்கு இது இரண்டாவது திருமணம் என்பதால் இந்தத் திருமணத்தை பாபுவின் வீட்டில் ஏற்கவில்லையாம். இதையடுத்து தீபாவும், பாபுவும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இதற்கிடையில் தீபா தனது சமூகவலைதள பக்கத்தில் ‘என் புருஷன்’ என குறிப்பிட்டு தன் கணவர் சாய்கணேஷ் பாபுவுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதனையடுத்து பிரபலங்களும் ரசிகர்களும் தீபாவின் வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.