ஜனாதிபதிக்கு நாடு கடமைப்பட்டுள்ளது – பிரசன்ன ரணதுங்க

0
203

நாடு என்ற வகையில் அனைவரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடமைப்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் அமைப்பாளரும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார். மக்களால் தூக்கி எறியப்பட்ட ரணில் விக்ரமசிங்க நாட்டின் ஜனாதிபதியாக பதவிக்கு வருவார் என எவரும் எதிர்பார்க்கவில்லை.

நாடு பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருந்த நிலைமையில் ரணில் விக்ரமசிங்க புதிய எதிர்பார்ப்பை பெற்றுக் கொடுத்தார். நாடு என்ற வகையில் நாம் அவருக்கு கடமைப்பட்டுள்ளோம். இதனை கூற நாங்கள் தயங்க போவதில்லை எனவும் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.