ரிலையன்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான முகேஷ் அம்பானி, தற்போது ஹொட்டல் துறையில் தமது பார்வையை திருப்பியுள்ளார் என்றே கூறப்படுகிறது.
எலிசபெத் ராணியார் வாழ்ந்த மாளிகை
லண்டனில் முதலாம் எலிசபெத் ராணியார் வாழ்ந்த மாளிகை ஒன்றை விலைக்கு வாங்கிய முகேஷ் அம்பானி, அதை சொகுசு ஹொட்டலாக மாற்றியுள்ளார். ஆனால் முகேஷ் அம்பானியின் ஹொட்டல் வணிகத்தை ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஓபராய் குழுமம் நிர்வகித்து வருகிறது.
லண்டனில் பிரபலமான Stoke Park Country Club என்ற சொகுசு ஹொட்டலுக்கு உரிமையாளர் முகேஷ் அம்பானி என்பதுடன், 2021ல் சுமார் 500 கோடி தொகைக்கு மேல் செலவிட்டு, அந்த கட்டிடத்தை வாங்கியுள்ளார்.
ஆடம்பர வீட்டை விற்ற முகேஷ் அம்பானி; விலை என்ன தெரியுமா?
லண்டன் புறநகர் பகுதியில் அமைந்துள்ள இந்த Stoke Park Country Club சுமார் 300 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டது. ஐரோப்பாவிலேயே சிறந்த ஹொட்டல்களில் ஒன்று முகேஷ் அம்பானியின் இந்த Stoke Park Country Club.
Stoke Park Country Club
இங்கு மொத்தம் 49 படுக்கையறைகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் 13 டென்னிஸ் மைதானங்கள் மற்றும் உட்புற நீச்சல் குளங்கள், 27 துளை சாம்பியன்ஷிப் கோல்ஃப் மைதானம், விருது பெற்ற ஸ்பாக்கள், அதிநவீன ஜிம்னாசியம் என செதுக்கப்பட்டுள்ளது.
Stoke Park Country Club-ல் பல சிறப்பு விருந்தினர்கள் தங்கிச் சென்றுள்ளனர். மட்டுமின்றி பிரித்தானிய மன்னர் குடும்பத்து உறுப்பினர்களும் பலமுறை இங்கு விஜயம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 1581 காலகட்டத்தில் முதலாம் எலிசபெத் ராணியார் இப்பகுதியில் வசித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.