நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய திடீர் சுகயீனம் காரணமாக நேற்று முன்தினம் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விருந்தொன்றின் போது உணவொன்றை உட்கொண்டமையால் ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக அமைச்சர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசேட விசாரணை
கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இந்த உணவை உட்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் மருத்துவ,அனையில் அவரது உடல்நிலை தேறி வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அமைச்சர் திடீரென சுகயீனமடைந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.