ஏன் இரவு நேரங்களில் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்? தெரிந்து கொள்வோம்

0
208

பொதுவாக தற்போது இருப்பவர்களில் பெரும்பான்மையினர் சிறுநீரக கோளாறுவால் பாதிக்கபட்டுள்ளனர்.

இந்த பிரச்சினை தவறான உணவு பழக்கங்கள் மற்றும் போதைப்பொருள் ஆகிய காரணங்களால் ஏற்படுகின்றது.

நமது உடம்பிலுள்ள சிறுநீரகம், ஹார்மோன்களை உற்பத்தி செய்தல், ரத்தத்தை சுத்திகரிப்பது, கனிமச்சத்துக்களை உறிஞ்சுவது, சிறுநீரை பிரிப்பது, உடலின் அல்கலைன் அமிலத்தை சீராக பராமரிப்பது ஆகிய செயற்பாடுகளை செய்கின்றது.

அத்துடன் சிறுநீரக பிரச்சினை இதய நோய்கள், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிரமாக காணப்படும்.

அந்த வகையில், சிறுநீரக பாதிப்பு எவ்வாறு ஏற்படுகின்றது, அதன் அறிகுறிகள் தான் என்ன,? என்பதனை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

ஏன் தண்ணீர் குடிக்கணும்?

ஏன் இரவு நேரங்களில் அதிகமாக தண்ணீர் குடிக்கணும்? பெண்கள் அவசியம் தெரிஞ்சிக்கோங்க!! | Symptoms Of Kidney Damage In Tamil

1. தண்ணீர் குடிப்பது குறைவாக இருந்தால் சிறுநீரக இயக்கம் பாதிக்கும். உங்களின் சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறத்தில் வெளிவந்தால்,இதன் அறிகுறியாக கருதலாம்.

2. சிறுநீரை அடக்கி வைத்திருந்தால் அது சிறுநீர்ப்பையிற்கு அழுத்தம் கொடுக்கும். இந்த பழக்கம் தொடருமாக இருந்தால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும்.

3. உடலில் உப்பின் அளவு அதிகமாகும் பொழுது ரத்த அழுத்தத்தை அதிகரித்து, சிறுநீரகத்தில் அழுத்தத்தை அதிகமாகும். இதற்காக வேறு வலி நிவாரணிகளை எடுத்து கொண்டால் அதுவும் காலப்போக்கில் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும்.

4. கால்சியம் உடலில் தேங்கி நிற்கும் பொழுது சிறுநீரக கற்கள் ஏற்படும். இதனை தடுக்க வேண்டும் என்றால் காய்கறிகள், பீன்ஸ், நட்ஸ், அவகேடோ ஆகிய உணவுகளை அடிக்கடி சாப்பிட வேண்டும்.

5. இரவு நேரத்தில் சரியாக தூங்காமல் இருப்பவர்களுக்கும் சிறுநீரக பாதிப்பு இருக்கும். ஏனெனின் சிறுநீரக திசுக்கள் இரவு நேரங்களில் தான் புதுப்பிக்கப்படும்.