இலங்கை மத்திய வங்கி வளாகத்திற்கு முன் பதற்றம்; 09 பேர் கைது

0
166

இலங்கை மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்தவர்களில் 09 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குத்தகை மற்றும் கடன் செலுத்துவோர் சங்கத்தின் உறுப்பினர்கள் குழுவொன்று இலங்கை மத்திய வங்கியின் வளாகத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்துள்ளனர்.

3 பெண்களும் 6 ஆண்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன் காரணமாக அந்த இடத்தில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாகத் தகவலறியப்பட்டுள்ளது.