13 தொடர்பில் அடுத்தகட்ட நகர்வு..! ஜனாதிபதி விசேட அறிவிப்பு

0
126

அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் சம்பந்தமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தவுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு தமிழ்க் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்தியாவும் இதற்கான அழுத்தத்தைப் பிரயோகித்து வருகின்றது.

தேவையான சட்டத் திருத்தங்கள் 

இந்நிலையில் பொலிஸ் அதிகாரம் தவிர 13ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள அதிகாரங்களைப் பகிர்வது சம்பந்தமாகவும், அதற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் பற்றியும் அரசு அவதானம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பில் கட்சிகளிடமும் ஆலோசனைகள் கோரப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே 13ஆவது திருத்தச் சட்ட விவகாரத்தில் அடுத்தகட்ட நகர்வுகள் சம்பந்தமான அரசின் நிலைப்பாட்டை அடுத்த வாரம் நாடாளுமன்றில் ஜனாதிபதி தெளிவுபடுத்தவுள்ளார்.