பாடகி உமாரா சின்ஹவன்ச தேசிய கீதத்தை திரிபுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அத்தோடு அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
உமாரா சின்ஹவஸ்தவை இன்று (02) அமைச்சில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.