மருத்துவமனை ஊழியர் தாக்கியதில் நோயாளி மரணம்; உண்மையை மறைக்கும் மருத்துவமனை!

0
152

அங்கொட மனநோய் வைத்தியசாலையின் ஊழியர் ஒருவரால் தாக்கப்பட்ட நோயாளியொருவர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம் இதுகுறித்து மௌனம் காப்பதாகவும் உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மனநோயினால் பாதிக்கப்பட்டிருந்த 28 வயது நபர் ஒருவர் ஜூலை 20ம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  வைத்தியசாலை ஊழியர் ஒருவரால் தாக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளார்.

பிரேதப் பரிசோதனையில் வெளிவந்த தகவல்

நோயாளியை கட்டுப்படுத்த முயன்றவேளை அவரை தாக்கியுள்ளனர். பிரேதப் பரிசோதனையின் தாக்குதலுக்கு உள்ளான நபருக்கு பலகாயங்கள் ஏற்பட்டுள்ளமையும் அதனால் இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

வைத்தியசாலை ஊழியரால் தாக்கப்பட்ட நோயாளி மரணம்; உண்மையை மறைக்கும் மருத்துவமனை! | Patient Dies Assaulted By Hospital Worker

சம்பவம் குறித்து கேள்வி எழுப்பிய வேளை சுகாதார அமைச்சு கருத்து கூறுவதற்கு தடை விதித்துள்ளதை சுட்டிக்காட்டி வைத்தியசாலை நிர்வாகம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தவர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில் நோயாளி உயிரிழந்தமை தொடர்பில் உண்மையை மறைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்ற உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.