டுவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ ஜக் டோர்சி ( Jack Dorsey) அண்மையில் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் இந்திய அரசினால் தான் மிரட்டப்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.
இது உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. முன்னாள் சி.இ.ஓ ஜக் டோர்சி அளித்த செவ்வியில்,
ட்விட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தபோது எந்தெந்த வெளிநாடுகளில் இருந்து என்ன மாதிரியான அழுத்தங்களை அவர் சந்திக்க நேர்ந்தது என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு டார்ஸி இந்தப் பதிலைக் கூறியுள்ளார்.
”இந்தியாவில் இடம்பெற்ற விவசாயிகளின் போராட்டத்தின் போது சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்குமாறு டுவிட்டர் நிறுவனத்தை இந்திய அரசு மிரட்டியது” எனத் தெரிவித்திருந்தார்.
குற்றச்சாட்டுகள் பொய்யானவை
இந்நிலையில் இது தொடர்பில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ஜக் டோர்சியின் கருத்தை மறுத்துள்ளார்.
அதோடு அவரது குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை எனவும் ”டோர்சி திடீரென விழித்து கொண்டு ஏதேதோ உளறுகின்றார் எனவும் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.