பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்கான முதல் தடவையாக பெண் உத்தியோகத்தர்கள்

0
165

பொலன்னறுவையில் வாகனங்களை சோதனையிடுவது உள்ளிட்ட பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு கடமைகளுக்காக முதல் தடவையாக 8 பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு அண்மையில் பொலன்னறுவை பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த சில்வா தலைமையில் நடைபெற்றது.

பொறுப்பேற்கும் நிகழ்வு அண்மையில் பொலன்னறுவை பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த சில்வா தலைமையில் நடைபெற்றது.