வெள்ளை மலர்களுடன் கொழும்பில் திரளப்போகும் மக்கள்

0
168

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் கொழும்பிலும் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளைய தினம் (18.05.2023) காலை 10.30 மணிக்கு பொரளை கனத்தை சுற்றுவட்டத்தில் இந்நிகழ்வுகள் இடம்பெறும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

வடக்கு கிழக்குக்கு ஆதரவு

வடக்கு கிழக்கில் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையிலேயெ இந்நிகழ்வு இடம்பெறவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இந் நிகழ்வுகளில் கலந்துகொள்பவர்கள் வெள்ளை மலர்களை கொண்டுவரலாம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.