பேருந்தில் பெண்ணை புகைப்படம் எடுத்ததால் வந்த வினை..

0
201

கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்தின் சாரதி, நடத்துனர் மற்றும் இளம் பயணி ஒருவரை நேற்றிரவு இரு இடங்களில் வைத்து சிலர் கொடூரமாக தாக்கியுள்ளனர்.

பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கெமெராவில் இந்த தாக்குதல் சம்பவம் பதிவாகியுள்ளது.

தாக்குதல்கள் முதலில் கிந்தோட்டை பிரதேசத்திலும் பின்னர் வெலிகம பிரதேசத்திலும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் தாக்குதலுக்குள்ளான பயணி பஸ்ஸில் பெண் ஒருவரை புகைப்படம் எடுத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.