காதலனால் கடத்தப்பட்ட 15 வயது சிறுமி

0
284

மினுவாங்கொடையில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒபாத பிரதேசத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவரால் குறித்த சிறுமி கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

குறித்த சிறுமிக்கும் இளைஞனுக்கும் காதல் தொடர்பு இருந்ததாகவும் சிறுமி அந்த உறவை முறித்து கொண்டதால் இளைஞர் தொடர்ந்தும் அவரை மிரட்டி வந்துள்ளார்.

இதன் காரணமாக சிறுமியை மொனராகலை பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைக்க குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த இளைஞர், சிறுமி தங்கவைக்கப்பட்டிருந்த உறவினரின் வீட்டிற்கு சென்று சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெல்லவாய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் இதுவரை சிறுமி தொடர்பில் எவ்வித தகவலும் தெரியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.