களுத்துறையில் இடம்பெற்ற விபத்தில் விரைவில் திருமணம் நடைபெறவிருந்த யுவதி உயிரிழந்த நிலையில், விபத்து தொடர்பில் யுவதியின் காதலன் சாட்சியமளித்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்த யுவதி அடுத்த மாதம் திருமணத்திற்கு தயாரான பட்டதாரி மாணவி என அவர் குறிப்பிட்டுள்ளார். விபத்து தொடர்பில் காதலன் கண்ணீருடன் கூறுகையில்,
காதலன் கண்ணீர் வாக்குமூலம்
“விரைவில் திருமணம் செய்து கொள்ள இருந்தோம். களுத்துறையில் இருந்து வந்து கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றதாக உயிரிழந்த யுவதியின் காதலன் கூறியுள்ளார்.
களுத்துறை, கொஹொலன, செருபிட்ட – கந்தமுல்ல பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய உதேனி நிமேஷா கருணாதிலக்க என்ற யுவதியே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
நாங்கள் இருவரும் புகையிரதம் ஒன்றிலேயே அறிமுகமானோம். பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் எமது அடுத்த மாதம் நடக்கவிருந்தது. சம்பவத்தன்று நிமேஷாவுடன் அவர்களது வீட்டில் இருந்து புறப்பட்டு மோட்டார் சைக்கிளில் களுத்துறைக்கு சென்றேன். பிறகு மாலை நான்கு மணியளவில் கடற்கரைக்குச் சென்று பேசிக்கொண்டிருந்தோம்.
மீன் வாங்க சென்றபோது விபத்து
மாலை 6 மணியளவில் வங்கியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி பணத்தை எடுத்தோம். அதன் பின்னர் பாலத்தோட்ட வீதியில் இருந்து வீட்டுக்கு வந்தோம். மீன் வாங்க நினைத்து நாகொட சந்திக்கு வந்தோம்.
அங்கு மீன்கள் இல்லை. அதன் பின்னர் அருகில் உள்ள சந்தியில் உள்ள மீன் கடைக்கு சென்றேன். இந்த கடை வீதியின் இடது பக்கத்தில் உள்ளது. அப்போது ஒரு சத்தம் கேட்டது. வாகனம் ஒன்று மோதி இருவரும் நடு வீதி நோக்கி வீசப்பட்டோம்.
அவர் காதில் இருந்து இரத்தம் வந்தது. சுற்றி இருந்தவர்களின் உதவியுடன் முச்சக்கரவண்டியில் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றேன்.
அங்கு அவருக்கு ஒட்சிசன் குழாய்கள் வைக்கப்பட்டன. இந்நிலையில் காயங்கள் காரணமாக நானும் வேறு அறையில் அனுமதிக்கப்பட்டேன். எனினும் மறுநாள் காலை நிமேஷா இறந்துவிட்டதை தான் அறித்ததாகவும் உயிரிழந்த யுவதியின் காதலன் கண்ணீருடன் கூறியுள்ளார்.