போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே பயங்கர மோதல்!

0
206

வீரகெட்டிய – அத்தனயால பகுதியில் பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த மோதல் சம்பவத்தில் 8 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், பிரதேசவாசிகளை சோதனைக்கு உட்படுத்த முயற்சித்த தருணத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறியுள்ளது. 

பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் பயங்கர மோதல்! | Conflict Between The Police And The Public