ஃபின்லாந்தை சேர்ந்த பெற்றொர்கள் பெற்ற மகளை வேறு எவரோ போல ஆதரவற்ற காப்பகத்தில் இருந்து தத்தெடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
5 ஆண்டுகளாக தான் வளர்த்த பெண் குழந்தை தன்னுடைய மகள் இல்லை என சோதனை செய்து பார்த்ததில் தனது மகள் இல்லை என்றதும் மனைவி மீது சந்தேகித்திருக்கிறார்.
இதனையடுத்து அந்த பெண்ணும் சோதனை செய்ததில் அவருக்கும் அந்த குழந்தை தனது மகளே இல்லை என்ற அதே முடிவே வந்திருக்கிறது.
இதனையடுத்து பிரசவம் பார்த்த மருத்துவமனையில் பிரசவத்தின் போது பெண் குழந்தைகளை மாற்றி வைத்ததே இதற்கெல்லாம் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
வழக்கை விசாரித்ததில் குற்றத்தை ஒப்புக்கொண்ட அந்த மருத்துவமனை நிர்வாகம் 2 மில்லியன் டாலர் இழப்பீடாக கொடுத்திருக்கிறது.
இந்த நிலையில் வழக்கு தொடர்ந்த தம்பதி அவர்களது உயிரியல் ரீதியான மகளை தேடும் பணியையும் தொடங்கியிருக்கிறார்கள்.
அதில் கைமாறிச் சென்ற அவர்களது பெண் குழந்தையை வளர்த்த அந்த பெற்றோர் பராமரிப்பு இல்லத்தில் விட்டுச் சென்றது தெரியவந்துள்ளது.