பேருந்து விபத்து; 20 பேர் காயம்!

0
451

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்று வீதியை விட்டு விலகி வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரத்தினபுரியில் இருந்து பாலாபத்தல நோக்கி சென்ற பேருந்தே விபத்தில் சிக்கியுள்ளது.

இந்த விபத்து இந்துருவ பெரிய வளைவுக்கு அருகில் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்துள்ளவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.