தானாக இயங்கி ஓடைக்குள் விழுந்த ட்ரெக்டர்

0
313

ட்ரெக்டர் ஒன்று ஓடைக்குள் பாய்ந்தில் சாரதி படுகாயமடைந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச்சம்பவம் டிக்கோயா பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

டிக்கோயா தோட்ட தொழிற்சாலையின் களஞ்சியசாலைக்கு மரக்கட்டைகளை ஏற்றிச் சென்ற குறித்த டரெக்டர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது, திடீரென தானாக இயங்கி அருகில் இருந்து ஓடைக்குள் கவிழ்ந்துள்ளது.

இவ்வாறு தானாகவே இயங்கிய ட்ரெக்டரை நிறுத்துவதற்கு சாரதி முயற்சித்த போது படுகாயமடைந்து டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.