களவாட சென்ற இடத்தில் தொலைபேசி விழுந்தது தெரியாது தலைதெறிக்க ஓடிய திருடன்!

0
447

நானுஓயா டெஸ்போட் தோட்டத்தில் வீடு ஒன்றினுள் திருடும் நோக்குடன் உள்நுளைந்த திருடன் விட்டினர் சத்தம் போட்டதால் தொலைபேசி விழுந்தது தெரியாது தலைதெறிக்க ஓடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீட்டினுள் திருடனை இருப்பதைக் கண்டு வீட்டு உரிமையாளர்கள் சத்தம் போட்டு அயலவர்களை அழைத்த நிலையில் சத்தம் கேட்டு திருடன் வீட்டில் இருந்து தப்பியோடியுள்ளார்.

களவாடசென்ற இடத்தில் தொலைபேசி விழுந்தது தெரியாது தலைதெறிக்க ஓடிய திருடன்! | The Thief Ran Away Without Knowing That The Phone

தலைதெறிக்க ஓடிய திருடன்

எனினும் தப்பி ஓடியவரை அயலவர்கள் துரத்தி சென்ற போது கையடக்கத் தொலைபேசி தவறுதலாக விழுந்துள்ளது. எனினும் அதனை அறிந்து கொள்ளாத திருடன் தப்பியோடியுள்ளார்.

வீட்டு உரிமையாளர்கள் கண்டெடுத்த கையடக்கத் தொலைபேசி மூலம் திருடனை அடையாளம் காண்பதற்கு நானுஓயா பொலிஸார் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.