யாழில் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபி முன் திருமணம் செய்துகொண்ட தம்பதி..

0
313

யாழில் புதுமணத் தம்பதிகள், நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபி முன் நேற்றையதினம் (03-02-2023) தாலி கட்டி திருமணம் செய்துக்கொண்டுள்ளனர். 

இதேவேளை, தமிழ் மீதும் தமிழர்களது தியாகத்தின் மீதும் அவர்கள் கொண்ட அளப்பரிய பற்றினால் அவர்கள் இவ்வாறு திருமணம் செய்து கொண்டனர்.

திருநிறைச்செல்வன் விவேகானந்தா தமிழ்ஈசன் அவர்களும் திருநிறைச்செல்வி போசிந்தா அவர்களும் இவ்வாறு திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

யாழில் வித்தியாசமாக திருமணம் செய்துகொண்ட தம்பதி! குவியும் பாராட்டுக்கள் | Couple Got Married Front Thileepan Memorial Jaffna

தமிழ்ஈசன் அவர்கள் தனியார் துறை ஆசிரியராக கடமையாற்றி வருகின்றார்.

அவர்களது திருமணத்திற்கு சமூக ஊடகங்களிலும் நேரிலும் வாழ்த்துக்கள் சொல்வதோடு அவர்களது இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.