படுக்கையில் கிடந்த பாட்டி! கண்ணீர் வரவழைத்த குரங்கின் பாசப்போராட்டம்..

0
297

குரங்கு ஒன்று தனது பசியைப் போக்கிய மூதாட்டி இரண்டு தினங்களாக காணாமல் போனதால் வீட்டிற்கு வந்து அவரைப் பார்த்து தனது பாசத்தை கொட்டிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பொதுவாக குரங்கு சேட்டை என்றாலே சற்று அதிகமாகவே இருக்கும். ஆனால் இந்த குரங்குகள் மனதிலும் பாசம் அதிகமாகவே இருக்கும் என்பதை மிகத் தெளிவாக விளக்கியுள்ள இந்த காட்சி.

ஆம் வயதான தாய் ஒருவர், தினமும் காலையில் லங்கூர் என்று அழைக்கப்படும் குரங்கு ஒன்றிற்கு வழக்கமாக ரொட்டி கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் நோய் காரணமாக இரண்டு நாட்கள் குரங்கை பார்க்காமலும் ரொட்டி கொடுக்காமலும் இருந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பாட்டியைத் தேடி குரங்கு வீட்டிற்கே வந்துள்ள நிலையில், அவரை கட்டியணைத்து முத்தம் கொடுத்து அவர் மீது அமர்ந்து கொண்டு தனது பாசப்போராட்டத்தை நிகழ்த்தியுள்ளது.