தைவானிலிருந்து சிங்கப்பூருக்கு பயணிக்கவிருந்த விமானத்தில் பயணி ஒருவரின் power bank எனும் மின்னூட்டச் சாதனம் தீப்பற்றிக் கொண்டமையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சாதனத்தின் உரிமையாளருக்கும் அவருடன் பயணம் செய்தவருக்கும் கைவிரல்களில் லேசான தீக்காயங்கள் ஏற்பட்டன.
இதன்போது மின்னூட்டச் சாதனத்தை அடிக்கடி பயன்படுத்தும் சிலர் சம்பவம் குறித்து அக்கறை தெரிவித்தனர். இதுவரை நான் மின்னூட்டச் சாதனத்தை விமானத்தில் பயன்படுத்தியதில்லை.
ஆனால் எப்போதும் கொண்டு போவதுண்டு சாதனத்தைப் பயன்படுத்தினாலும் ஒன்றும் நடக்காது என்று தான் நினைத்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.